Truyen3h.Co

கல்யாணம் டூ காதல்

2 ஹாசினி

NiranjanaNepol

2 ஹாசினி


நந்தினியை சூரியகுமார் கல்யாணம் பண்ணிக்கணும்னா, நான் சூர்யாகுமாரோட தங்கை ஹாசினியைக் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு கண்டிஷன் வச்சாங்க சேதுபதி குடும்பம். அவங்க கண்டிஷன் அதோட நிக்கல. கல்யாணத்துக்குப் பிறகு நான் என் அப்பா அம்மா கூட இருக்கக் கூடாது... அதாவது, கூட்டு குடும்பத்துல இருக்கக் கூடாதாம். எங்களுக்கு அரண்மனை மாதிரி ஒரு பங்களாவை கொடுத்து, அதுல தான் நாங்க இருக்கணும்னு அவங்க விரும்புனாங்க. ஏன்னா, அப்ப தான் அவங்க மக மகாராணி மாதிரி இருப்பாளாம். அந்தக் கண்டிஷனைக் கேட்டபோ என் ரத்தம் கொதிச்சு போச்சு.


ஆனா...


அவங்களோட எல்லா கண்டிஷனுக்கும் ஒத்துக்கிட்டு, எங்க அப்பா என் கல்யாணத்தை ஹாசினியோட முடிவு பண்ணார். எதைப் பத்தியும் யோசிக்கிற நிலைமையில அவர் இல்ல. அவருக்கு வேண்டியதெல்லாம், நஷ்டத்துல இருந்து மீண்டு வரணும். இளவேந்தன் அப்படிங்கற ஒரு சுத்தமான பிசினஸ்மேன் கிட்டயிருந்து நான் வேற என்ன எதிர்பாக்க முடியும்?


ஹாசினி...! அவ யாருன்னு எனக்குத் தெரியாது. அவ எப்படி இருப்பா... தெரியாது. அவளுக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இருக்கா இல்லையான்னு கூடத் தெரியாது. ஆனாலும், நான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு தான் ஆகணும். எனக்கு வேற வழி இல்ல. எனக்கு வேற வாய்ப்பே கொடுக்கப் படல. ஹாசினிங்கிற பொண்ணு, என்னை ஆளப்போறா. அதுல எனக்கு எந்தச் சந்தேகமும் இல்ல. ஏன்னா, அவ என்னை விலைக்கு வாங்கியிருக்கா. அதனால எங்களுக்கு இடையில எந்தவித புரிதலும் இருக்கப்போறதில்ல.


என் கல்யாணம் நிச்சயமாகப் போற விஷயத்தை எங்க அப்பா சொன்ன உடனே, எங்க அம்மாவ நான் கோவமா பார்த்தப்போ, அவங்க இயலாமையோட தலை குனிஞ்சுகிட்டாங்க. என் தங்கச்சியோ, என்னை பாவமா பாத்துக்கிட்டு இருந்தா. முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்லியே ஆகணும். என் தங்கையோட கண்ணு ரொம்ப அழகா இருக்கும். அவ கண்ணை என்னால படிக்க முடியும். அதுல ஒரு தவிப்பை நான் பார்த்தேன். எனக்கு என்ன வேணும்னு அவளுக்குத் தெரியும். இப்போ எனக்குக் கிடைச்சிருக்கிறது, நான் ஆசைப்பட்டது இல்ல.அவ முதல் தடவை சூரியகுமாரை மீட் பண்ணப்போ, வாய் ஓயாம அவனைப் பத்தியே பேசிக்கிட்டு இருந்தது எனக்கு நல்லா நியாபகம் இருக்கு. அன்னைக்கு, அவனோட எளிமையும் அடக்கமும் அவளுக்கு பிடிச்சிருக்குன்னு நினைச்சேன். ஆனா அவன் மேல அவளுக்கு காதல் ஏற்படும்னு நான் நினைக்கல. அவ என்கிட்ட மறைச்ச ஒரே விஷயம் அது மட்டும் தான். எந்த தங்கச்சி தான், அண்ணன் கிட்ட தன் காதல் கதையை சொல்லுவா?


என் கையைப் பிடிச்சு, என்னை தனியா இழுத்துகிட்டு போனா நந்தினி.


"அண்ணா, எனக்கு இந்தக் கல்யாணம் வேணாம்." கலங்கிய கண்ணோடு சொன்னா. அவ கண்ணீரை என்னால சகிக்க முடியாது. ஏன்னா அதுல எப்பவும் உண்மை மட்டும் தான் இருக்கும். நான் அவ கண்ணீரைத் துடைச்சிவிட்டேன்.


"உன் ஆசை என்னன்னு எனக்குத் தெரியும். நான் சூர்யா கிட்ட உனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு சொல்லிடுறேன். நான் சொன்னா அவர் கேட்பார்னு எனக்கு நம்பிக்கை இருக்கு, அண்ணான்னு" சொன்னா.


"ஓய்... கல்யாணத்துக்கு முன்னாடியே அவரை உன் கண்ட்ரோல்ல கொண்டுவர நினைக்கிறியா?" ன்னு நான் சகஜமா இருக்குறா மாதிரி காட்டிக்கிட்டேன்.


"ஹாப்பியா இருக்கிற மாதிரி நடிக்காத. உன்னை பத்தி எனக்குத் தெரியாதா?"ன்னு சொன்னா.


"எனக்கு இந்தக் கல்யாணத்துல் சம்மதம்" ன்னு பொய் சொன்னேன்."பொய் சொல்லாத," அவ உண்மையைக் கண்டுபிடிச்சிட்டா.


"நான் ஏன் பொய் சொல்லணும்? நம்ம இருக்கிறது ரொம்ப கிரிட்டிக்கலான கண்டிஷன். சரியான நேரத்துல நமக்குக் கை கொடுத்து உதவுறதுக்காக, நம்ம அவங்களுக்கு தேங்க்ஸ் தான் சொல்லணும். நான் எவ்வளவு டென்ஷனா இருந்தேன் தெரியுமா? அவங்க நம்ம வழியை கிளியர் பண்ணி கொடுத்திருக்காங்க. அதுல ஜாலியா நடக்க எனக்கு என்ன பிரச்சனை இருக்கப் போகுது? உன் கல்யாணத்தை ஜாலியா என்ஜாய் பண்ணு." ன்னு அவளை சமாதானப்படுத்த ட்ரை பண்ணேன்.


"நீ உன் கல்யாணத்தை என்ஜாய் பண்ணுவியா, அண்ணா?" என்னை மடக்கினா என் தங்கச்சி.


"ஏன் மாட்டேன்? நான் கல்யாணம் பண்ணிக்கப் போறது ஒரு இளவரசியை ஆச்சே!" என் சிரிப்புல இருந்த பொய்யை அவ கண்டுபிடிக்கக் கூடாதுன்னு நான் கவனமா இருந்தேன்.


அவ என்னை நம்ப முடியாம பார்த்தா. கண்ணிமைக்குற நேரத்துல நான் அவ்வளவு பெரிய வித்தியாசத்தை காட்டுனா, அவளால எப்படி நம்ப முடியும்?எனக்கு வேற வழியில்ல. என் தங்கையை என்னால காயப்படுத்த முடியாது. அவ தன் காதலை இழக்க நான் காரணமா இருக்க முடியாது. என் தங்கைக்காக, என் மேல திணிக்கப்பட்ட இந்த கல்யாணத்தை நான் ஏத்துக்கிட்டு தான் ஆகணும். ஏன்னா, சூரியகுமார் குடும்பத்தினர் அவங்களோட நிலைப்பாட்டில் ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்தாங்க. நாங்க அதை மாத்த ட்ரை பண்ணா, அவங்க ரெண்டு கல்யாணத்தையும் நிறுத்திடுவாங்கன்னு எனக்குத் தெரியும்.


என் ஒய்ஃப் , எங்க அம்மாவுக்கு என்னவெல்லாம் செய்யணும்னு நான் எதிர்பார்த்தேனோ, அதை எல்லாம் இப்போ நானே எங்க அம்மாவுக்கு நேரடியா செஞ்சுட்டா போகுது... அவ்வளவு தானே! அந்த நிலைமையை ஃபேஸ் பண்ண நான் தயாரானேன். ஆனாலும் என் மனசுல ஒரு தவிப்பு இருக்கத்தான் செஞ்சது. நான் பார்த்து கூட இருக்காத அந்தப் பொண்ணு, என் மனசை ஆளத் தொடங்கிட்டா.


வாக்கு கொடுத்தபடியே எங்க பிசினஸ்ல இருந்த எல்லா பிரச்சனைகளையும் சேதுபதி குடும்பத்தினர் தீர்த்து வச்சிட்டாங்க. எல்லாம் ஒரு மேஜிக் மாதிரி நடந்தது. அது, எனக்கு ஒரு பாயிண்ட்டை அண்டர்லைன் பண்ணி காட்டுச்சு. பணம் இருந்தா எல்லாமே சாத்தியம். அது மட்டும் இருந்துட்டா, நம்மால எதை வேணாலும் செஞ்சு முடிக்க முடியும். விருப்பம் இல்லாத ஒருத்தனை, கல்யாணத்துக்கு கூட ஒத்துக்க வைக்க முடியும்... சேதுபதி குடும்ப செஞ்ச மாதிரி.


என் கல்யாணம் நிச்சயம் ஆச்சு. எனக்கு கல்யாண பொண்ணை பார்க்கணும்னோ, அவளைப் பத்தி தெரிஞ்சிக்கணும்னோ, இன்ட்ரஸ்ட் இருக்கல. ரொம்ப சீக்கிரமே ஹாசினியை நான் மீட் பண்ணணும்னு எல்லாரும் என்னை கட்டாயப்படுத்த போறாங்கன்னு நான் கெஸ் பண்ணினேன். ஆனா அது நடக்கவே இல்ல. அது எனக்கு ரொம்ப பெரிய ஆச்சரியத்தை தந்தது. ஒரு பெரிய சாம்ராஜ்யத்தோட இளவரசி, தனக்கு வரையப்போற ஹஸ்பண்ட்டைப் பார்க்குற இன்ட்ரஸ்ட் இல்லாம எப்படி இருக்கா? இல்ல, எனக்கே தெரியாம அவ என்ன பாத்துட்டாளா?எது எப்படி இருந்தாலும், நான் ஹாசினியைக் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். அவ என்னோட மனைவியா மாறப் போறா. இந்த வாழ்க்கையை நான் ஏத்துக்கிட்டு தான் ஆகணும். அவளுக்கும் கல்யாண வாழ்க்கையை பத்தி நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். அவ கணவனா, அதை எல்லாம் நிறைவேத்தி வைக்க வேண்டியது என் கடமை. அதை, அவ என்கிட்ட எதிர்பார்த்தாலும், எதிர்பார்க்கலனாலும்...


ஹாசினியை வரவேற்க நான் ரெடியானேன். அவளை என் மனைவியா ஏத்துக்கவும், என் மனசை தயார்படுத்திக்கிட்டேன். அவளை நான் ஏத்துக்கிட்டேன் அப்படிங்கறதுக்கு முதல் படியா, அவளை பார்க்கணும்னு என் மனசுல ஆசை துளிர்விட்டது. அவளோட ஃபோட்டோ இருக்கான்னு கூகுள்ல தேடினேன். ஆனா அவ ஃபோட்டோ இல்ல.


மறுநாள்


என்னோட ஆஃபீஸ்ல ஒரு முக்கியமான ஃபைலை நான் பாத்துக்கிட்டு இருந்தபோ, லேண்ட் லைன் ஃபோன் ரிங் ஆச்சு. என் கையில இருந்த ஃபைலில் இருந்து, என் கண்ணை எடுக்காம, அந்தக் காலை அட்டென்ட் பண்னேன்.


"கௌத்தம் ஸ்பீக்கிங். யார் பேசுறீங்க?"

"ஹாசினி..." என்ற பதில் வந்தது.

எனக்கு வார்த்தை பஞ்சம் ஏற்பட்டுது. என்ன பேசுறதுன்னு தெரியல. நான் கல்யாணம் பண்ணிக்கப் போற அதே ஹாசினி தான் பேசினா. அவ எனக்கு கால் பண்ணுவான்னு நான் எதிர்பார்க்கல. இப்போ அவ எனக்கு எதுக்காக ஃபோன் பண்றா? ஒரு வேலை, அரச குடும்பத்துல இருக்கிறவங்க கலந்துக்குற மாதிரி, பெரிய பெரிய பார்ட்டிக்குப் போகலாம்னு என்னை கூப்பிடப் போறாளோ? என்னோட கற்பனை தேர், வேகமாக ஓடுச்சு.

"சொல்லு," என் குரல்ல முடிஞ்ச அளவுக்கு மென்மை காட்டினேன்.

"உங்கள கல்யாணம் பண்ணிக்க நான் விரும்பல" ன்னு சொல்லி என்னை பேச்சிழக்க வச்சா ஹாசினி.

அவளுக்கும் இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லையா?

"ஏன்னு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இருக்கிறதா நான் நினைக்கல. ஸ்டெப் அவே ஃப்ரம் திஸ் மேரேஜ்..." அப்படின்னு சொன்ன அவ குரல், பணிவா இல்ல.

அது என்னோட ஈகோவை தொட்டுப் பார்த்தது.

"எனக்கும் இந்த கல்யாணத்துல விருப்பமில்ல. அதுக்கு, எனக்கு ரொம்ப முக்கியமான காரணம் இருக்கு. அதை நீ தெரிஞ்சுக்கணும்னு அவசியம் இல்ல." ன்னு நானும் பதிலுக்கு விலாசினேன்.n

"அப்புறம் எதுக்கு தேவையில்லாம கல்யாண ஏற்பாடு நடந்துகிட்டு இருக்கு? ஸ்டெப் பேக்..." அவ குரலில் எரிச்சல் இருந்தது.

"இந்தக் கல்யாணம் உனக்கு பிடிக்கலைன்னா, நீயே நிறுத்தி இருக்கலாமே?" நான் அவளை கார்னர் பண்ண ட்ரை பண்ணேன்.

"ஐ அம் ஃபோர்ஸ்டு..." அப்படின்னு அவ சொன்னது எனக்கு ஆச்சரியமா இருந்தது.

அவளும் இந்தக் கல்யாணத்துக்காக நிர்பந்திக்கப்படுறாளா? என்னைப் மாதிரியேவா? ஆனா ஏன்? அவளுக்குப் பிடிக்காத கல்யாணத்தை செஞ்சுக்க சொல்லி, அவளை ஏன் கட்டாயப்படுத்துறாங்க? ஒருவேளை அவ வசதி இல்லாத பையனை காதலிச்சிட்டாளோ? அவன்கிட்ட இருந்து அவளை பிரிச்சி வைக்க இந்த கல்யாணத்தை பண்ணி வைக்கிறாங்களோ? நிறைய கேள்வி எனக்குள்ள எழுந்தது. என்னை சமாளிச்சுக்கிட்டு,

"நானும் அப்படித்தான்னு," சொன்னேன்.

"இந்த ரிலேஷன்ஷிப்ல என்னால சந்தோஷமா இருக்க முடியாது," ன்னு அவ தயங்காம சொன்னா.

"என்னாலையும், எப்பவும், நிச்சயமா முடியாது." அவளை விட நான் எந்த விதத்திலும் சளைச்சவன் இல்லன்னு காட்ட நானும் அதை சொன்னேன்.

"அப்படின்னா, ஏதாவது செஞ்சு இந்த கல்யாணத்தை நிறுத்துங்க." ன்னு அவ சொன்னது, நிச்சயமா ஆர்டர் தான்.

"ட்ரை பண்றேன்," ன்னு சொன்ன உடனே

"தேங்க்ஸ்," ன்னு காலை கட் பண்ணிட்டா.

அந்த காலை மாதிரியே, எங்க கல்யாண ஏற்பாடும் கட்டானா நல்லா இருக்கும்னு தோணுச்சு.

ஹாசினிக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு வெட்ட வெளிச்சமா தெரிஞ்சுடுச்சு. ஒருவேளை அவ வேற யாரையாவது காதலிக்கலாம். அவ இந்தியாவோட பாரம்பரியமான அரச குடும்பத்தை சேர்ந்த பொண்ணு. அப்படி இருக்கும்போது, அவ எப்படி சிங்கிளா இருப்பா?


அவளோட காலை அட்டென்ட் பண்ற வரைக்கும், அவளை பாக்கணும்னு என் மனசோட ஓரத்துல ஒரு ஆசை இருந்தது. ஆனா அவ கிட்ட பேசினதுக்கு பிறகு, அந்த எண்ணம் சுத்தமா அழிஞ்சி போச்சு.


அவ கிட்ட பேசினதுக்கு மரியாதை கொடுக்கற விதமா, எங்க கல்யாணத்தை நிறுத்த என்னால முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்ண நினைச்சேன். எங்க அப்பா கிட்ட பேசுறதுக்கு என்னை தயார் படுத்திக்கிட்டு வீட்டுக்குப் போனேன்.


நான் வீட்டுக்கு போன நேரம், எங்க கல்யாண பத்திரிகையையோட, என் தங்கச்சி என்கிட்ட ஓடி வந்தா.


"அண்ணா, இங்க பாரு நம்ம வெட்டிங் இன்விடேஷன் வந்துடுச்சு. எவ்வளவு அழகா இருக்குல்ல?" அவ பூரிப்போட சொல்லும் போது, என்ன சொல்றதுன்னு எனக்கு புரியல. என் தங்கைக்காக நான் அமைதியாயிட்டேன்.


எனக்குத் தெரியும், இந்த கல்யாணத்தை நடக்க விடுறதுக்காக, ஹாசினி என் மேல கொலை வெறியில இருப்பா. எனக்கும் தான் அவ மேல கோவம் இருக்கு. அவளுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லன்னா, அவளோட செல்வாக்கை பயன்படுத்தி, இந்த கல்யாணத்தை நிறுத்திட வேண்டியது தானே? ஒரு இளவரசியால அதை செய்ய முடியாதா?


..........டைம் ஜெட் வேகத்துல பறந்தது. ஹாசினியோட பேசின வார்த்தை என் தலை குள்ள கேட்டுகிட்டே இருந்தது. இந்த கல்யாணத்துல விருப்பமில்லாத ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, நான் என்ன செய்யப் போறேன்? அவ கூட என் லைஃப் எப்படி இருக்கப் போகுது? என்னால கற்பனை கூட செஞ்சு பாக்க முடியல. அதனால கற்பனை செய்றதையே நிறுத்திட்டேன்.


எவ்வளவு ட்ரை பண்ணாலும் என்னால ஹாசினியை பத்தி நினைக்காம இருக்கவே முடியல. ஏன்னா, நாளைக்கு எங்க கல்யாணம்.


தொடரும்...


Bạn đang đọc truyện trên: Truyen3h.Co