4 பதற்றம்
4 பதற்றம்
எங்க வீடு சேதுபதி அரண்மனை மாதிரி இல்லனாலும், ரொம்ப பெரிய பங்களா தாங்க. எங்க குடும்பத்தில் இருந்தவங்க ஹாசினியைச் சம்பிரதாயத்துக்காக மட்டுமில்லாம, மனசார வரவேற்றாங்க. அதை ஹாசினி உணர்ந்தாளான்னு தெரியல. அவ வேற மாதிரி கூட நினைச்சிருக்கலாம். அவ தான் கோடீஸ்வரன் விட்டு செல்ல பொண்ணாச்சே!
கல்யாணத்துக்கு வந்த விருந்தாளிங்க எல்லாரும் கிளம்பிட்டாலும், எங்க வீடு இன்னும் கூட்டமா தான் இருந்தது. பத்து பேர் இருக்கிற கூட்டுக் குடும்பம் எங்களோடது. எங்களுக்கு நடுவுல நிறைய முரண்பாடுகள் இருக்குங்க. ஆனா நாங்க அதை எல்லாம் எப்பவுமே பெரிசு படுத்தினது இல்ல. எந்த குடும்பத்தில் தான் பிரச்சனை இல்ல, சொல்லுங்க? இப்போ நான் என் குடும்பத்தை விட்டு பிரிஞ்சி போகணும். அரண்மனை மாதிரி ஒரு வீட்ல என் ஒய்ஃபோட தனியா வாழணும். அது எந்த அளவுக்கு சரிப்பட்டு வரும்னு எனக்குப் புரியல. என் குடும்பத்தில் இருந்த எல்லாருக்கும் அதை பத்தி வருத்தம் இருந்தது. ஆனா யாருமே வெளியில காட்டிக்கல. இந்தக் கல்யாணம் எப்படித் தவிர்க்கவே முடியாததோ, அதே மாதிரி, நான் என் குடும்பத்தை விட்டு பிரிஞ்சி போறதும் தவிர்க்க முடியாதது.
"ஹாசினி, வா, வந்து உன் மாமியார் வீட்டைப் பாரு." அப்படின்னு என் சித்தப்பா மகள் அகிலா ஹாசினியைக் கூப்பிட்டா.
ஹாசினி நகரவும் இல்ல, அவ கூப்பிட்டதைக் கண்டுக்கவுமில்ல. ஆனா அகிலா அவளை விட தயாரா இல்ல. அவர் கையைப் பிடிச்சி இழுத்துகிட்டு போனா. அவங்களைப் பத்தி கவலைப்படாம, நான் என் சித்தப்பா பசங்க, மாலன், நீலன் கூட அங்கேயே உட்கார்ந்துட்டேன். அதை பார்த்த அகிலா, அவங்களோட வரச் சொல்லி எனக்கு சைகை செஞ்சா. நான், 'ஓடிப் போயிடுனு' சைகை செய்ய, கலகலன்னு சிரிச்சபடி ஓடிப்போனா.நான் ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா இருந்தேன். எப்பவும் கலகலன்னு இருக்குற என் ஃபேமிலியில இருக்கிறவங்களோட ஹாசினி எப்படி பழகப் போறா? அவளோட வெறுப்பை அவங்க கிட்ட காட்டுவாளோ? எங்கிட்ட ஃபோன்ல பேசின மாதிரியே அவங்க கிட்டயும் பேசுவாளோ? இந்தக் கல்யாணத்துல எனக்கு விருப்பம் இல்லனாலும், அதை என் ஃபேமிலியில இருக்கிறவங்க தெரிஞ்சுக்க வேண்டாம்னு நான் நினைச்சேன். நான் எவ்வளவு கலகலப்பானவன்னுஅவங்களுக்குத் தெரியும். நான் இந்தக் கல்யாணத்தை ஏத்துக்கிட்டதா அவங்க நம்பிட்டாங்க. எனக்கும் அது தான் வேணும். ஆனா அதையே நான் ஹாசினி கிட்ட எதிர்பார்க்க முடியாது.
நான் அவகிட்ட இருந்து கொஞ்சம் தூரத்துல இருந்தாலும், அவ மேல ஒரு கண்ணு வச்சுக்கிட்டே இருந்தேன். அவங்க பேசுறதைக் கேட்டபடி.
"ஹாசினி, உன் பேருக்கு என்ன அர்த்தம்னு உனக்குத் தெரியுமா?" என் தங்கை அகிலா கேட்டா.
அவ கேட்ட கேள்வி, அவுட் ஆஃப் சிலபஸ்ல இருந்து வந்த மாதிரி, அவளை அப்படி ஒரு பார்வை பார்த்தா ஹாசினி.
"ஹாசினினா சிரிச்சுக்கிட்டே இருக்கிறவள்னு அர்த்தம். அந்தப் பேரை வச்சுக்கிட்டா மட்டும் போதாது. உன் பெயருக்கு நீ ப்ரைம் அம்பாசிடரா இருக்கணும். பேருக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் சிரி... அட்லீஸ்ட் ஸ்மைலாவது பண்ணு." கலகலன்னு சிரிச்சா அகிலா.
அப்பவும் சிரிக்காம அவளை அமைதியா பார்த்தா ஹாசினி.அப்போ, அவங்க கிட்ட போன எங்க அக்கா,
"எக்ஸ்கியூ அஸ், அக்கி. ஹாசினி, நீங்க என் கூட வாங்க." ஹாசினி கையைப் பிடிச்சு, அக்கா அவங்க ரூமுக்கு அவளைக் கூட்டிகிட்டுப் போனாங்க.
"சாரி ஹாசினி, ஜாலியா இருக்க உங்களுக்கு என்னால இப்ப டைம் கொடுக்க முடியல, " ன்னு எங்க அக்கா சொன்னதைக் கேட்டு நிச்சயமா ஹாசினி உள்ளுக்குள்ள சிரிச்சிருப்பா. ஜாலியாவா?
"போய் ரெடியாகுங்க. நான் உங்களை கௌத்தம் ரூமுக்குக் கூட்டிக்கிட்டு போறேன்."
அக்கா சொன்னதைக் கேட்டப்போ, எனக்குச் சிலுத்துப் போச்சு. அக்கா அவளை என்னோட ரூமுக்குக் கூட்டிகிட்டுப் போகப் போறாங்க. அன்னைக்கு எங்களுக்கு ஃபர்ஸ்ட் நைட். இதுக்கு எப்படி ரியாக்ட் பண்றதுன்னு எனக்குத் தெரியல. ஹாசினி எனக்கு யாரு? உலகத்தைப் பொறுத்தவரைக்கும் நாங்க ஹஸ்பெண்ட் அண்ட் ஒய்ஃப். ஆனா எங்களுக்கு இடையில எந்த உறவும் இல்ல. எந்த ஓட்டு உறவும் இல்லாத ஒரு பொண்ணு கூட ஒரே ரூம்ல இருக்கிறது நரகத்திற்கு சமமானது. வாழ்நாள் முழுக்க, அவ எப்படி, என்னோட ரூம்ல, என் கூடத் தங்கப் போறா? எனக்கு ரொம்ப கவலையா இருந்தது. என் வாழ்க்கையைப் பத்தி நான் எப்படி எல்லாம் கனவு கண்டேன் தெரியுமா? இப்போ நான் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழப் போறேன்னு எனக்கே புரியல. எனக்கு ரொம்ப கடுப்பா இருந்தது.முகத்தைக் கழுவிக்கிட்டு அக்காவோட ரூம்ல இருந்து வெளியில வந்தா ஹாஸினி. அவளை என்னோட ரூமுக்குக் கூட்டிகிட்டுப் போக, அக்கா வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. அவ வந்த உடனே, அவளை ஃபர்ஸ்ட் ஃபுளோர்ல இருந்த என் ரூமுக்குக் கூட்டிகிட்டுப் போய், என் ரூமோட கதவை அக்கா திறந்தாங்க. ஹாசினி உள்ள போனதை நான் கீழே இருந்து பாத்துகிட்டு இருந்தேன்.
என்னோட ரூமை டெகரேட் பண்ணி வச்சிருப்பாங்க... என் பெட் ஃபுல்லா பூவும், ரூம் ஃபுல்லா வாசனை மெழுகுவர்த்தியும் ஏத்தி இருக்கும். ஒரு கிங் சைஸ் பெட்டும், ஒரு சோஃபா செட்டும் போட்டதுக்குப் பிறகும், நிறைய இடம் காலியா இருக்கிற அளவுக்கு என் ரூம் ரொம்ப பெருசு. ஒரு 55 டிவியோட மட்டுமில்லாம, என் ரூமோட சுவர் ஃபுல்லா நிறைய பெயிண்டிங்ஸ் இருக்கு. ராயல் ப்ரின்ஸஸை அந்தப் பெயிண்டிங்ஸ் அட்ராக்ட் பண்ணுமான்னு எனக்குத் தெரியல. ஆமாங்க, அது என்னோட பெயிண்டிங்ஸ் தான். என்னோட டேஸ்ட் அந்தப் பெயிண்டிங்கில் தெரியும்.ஹாசினி கிட்ட,
"ஹேவ் எ நைஸ் டைம்," ன்னு சொல்லிட்டு எங்க அக்கா 'கெக்கபெக்கே' ன்னு சிரிச்சிருப்பாங்க.
ஹாசினியை என் ரூம்ல விட்டுட்டு, அக்கா என்கிட்ட வந்தாங்க.
"எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல டா. உன் மனசு எனக்குத் தெரியும். இது உன் வாழ்க்கை. அவங்க இங்க உனக்காக தான் இருக்காங்க. அதை புரிஞ்சுகிட்டு, இந்த உறவை ஏத்துக்க முயற்சி பண்ணு." அக்கா எமோஷனலா சொன்னாங்க.
"மச்சான் புத்திசாலி. நீ அவருக்கு அட்வைஸ் பண்ண வேண்டாம். அவருக்கு இதை எப்படி ஹாண்டில் பண்ணணும்னு தெரியும்." னு எங்க மாமா சிரிச்சபடி சொன்னாரு.
எங்க மாமா சொன்னது மிகை இல்லங்க. எல்லா விஷயத்தையும் நான் ரொம்ப ப்ராப்பரா ஹேண்டில் பண்ணுவேன், எங்க கம்பெனி நஷ்டத்தைச் சந்திக்கிற வரைக்கும்...! நான் தோத்துப்போன ஒரே விஷயம் அது தான். அதை சமாளிக்கிற திறமை மட்டும் எனக்கு இருந்திருந்தா, இன்னைக்கு நான் இருக்கிற சூழ்நிலையில இருந்திருக்க மாட்டேன். இந்தக் கல்யாணத்தை என்னால தவிர்த்திருக்க முடியும். ஆனா இப்போ அதைப் பத்தி யோசிச்சு எந்தப் பிரயோஜனமும் இல்ல.
அக்கா என்னை என் ரூமுக்குப் போகச் சொன்னாங்க. வாழ்க்கையிலேயே முதல் தடவையா, என் ரூமுக்குப் போக எனக்கு ரொம்ப சங்கடமா இருந்தது. இப்போதிலிருந்து, அது என்னோட ரூம் மட்டும் இல்ல, 'எங்க ரூம்'. நான் அதை ஹாசினியோட ஷேர் பண்ணணும், அது அவளுக்கு பிடிச்சிருந்தாலும், பிடிக்கலனாலும். என்னைத் தயார்படுத்திக்கிட்டு என் ரூமுக்குள்ள நுழைஞ்சா, என் ஒய்ஃப் சோஃபாவில் படுத்து தூங்கிக்கிட்டு இருந்தா. அவ தூங்கிட்டான்னு என்னால நம்ப முடியல. என்கிட்ட பேச விருப்பம் இல்லாம, அவ தூங்குற மாதிரி நடிச்சிருக்கணும். விருப்பம் இல்லாத ஒரு பொண்ணுகிட்ட நான் வேற என்ன எதிர்பார்க்க முடியும்?
அவ கட்டியிருந்த கனமான புடவையையும் நகையையும் பத்திக் கவலைப்படாம அவ தூங்கினதைப் பார்க்க எனக்கு ஆச்சரியமா இருந்தது. அதை எல்லாம் கழட்டி வச்சிட்டு தூங்கிருக்கலாமே! அவ சோஃபாவுல படுத்திருந்தது கூட எனக்குப் பெரிய ஆச்சரியம் தான். இளவரசி கட்டில்ல படுத்துகிட்டு, என்னை சோஃபாவுல படுத்துக்கச் சொல்லி கட்டளை இட்டு இருக்கலாம்...
என்னோட கேஷுவல் டிரஸை எடுத்துக்கிட்டு, நான் பாத்ரூமுக்குப் போனேன். எப்படா இந்த வேட்டி, சட்டையைக் கழட்டி போடுவோம்னு இருந்தது. ஹாசினியை நெனச்சப்போ ஆச்சரியமா இருந்தது. எப்படித் தான் இவ்வளவு நகையையும், கனமான புடவையையும் கட்டிக்கிட்டு அவ தூங்குகிறான்னு தெரியல.
நான் பாத்ரூமில் இருந்து வெளியில வந்தப்போ, அவ அதே பொசிஷன்ல தான் படுத்திருந்தா. உண்மையிலேயே அவ தூங்கிட்டா போலருக்கு. லைட்டை ஆஃப் பண்ணிட்டு நான் பெட்ல படுத்துட்டேன். ஆனா எனக்குத் தூக்கமே வரல. என் வாழ்க்கை இந்த லட்சணத்துல இருந்தா, எனக்கு எப்படிங்க தூக்கம் வரும்? என் லைஃப் ரொம்ப ஸ்மூத்தா போயிக்கிட்டு இருந்தது. ஆனா இப்போ, அது ஹாசினி கிட்ட வந்து முட்டிக்கிட்டு நிக்குது. கண்ணைத் திறந்து அவளைப் பார்க்க ட்ரை பண்ணேன். ஆனா இருட்டுல ஒன்னும் தெரியல.
எப்படி அவ இவ்வளவு சீக்கிரம் தூங்கிட்டா? உண்மையிலேயே அவ தூங்கிக்கிட்டு தான் இருக்காளா? இருக்கலாம்...! இன்னைக்கு முழுக்க வெயிட்டான புடவையையும் நகையையும் மாலையையும் சுமந்துகிட்டு இருந்ததுல, அவ டயர்ட் ஆகி இருக்கலாம்.
அவ ஏன் என்னைக் கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்னு நினைச்சா? அதுக்கு என்ன காரணமா இருக்கும்? அவ வேற யாரையாவது காதலிக்கிறாளா? இல்ல, அவ தகுதிக்கு ஏத்த மாதிரி ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைச்சாளா? காரணத்தைத் தெரிஞ்சுக்க என் மனசு தவிச்சது. ஆனா அதை எப்படித் தெரிஞ்சிக்கிறது? நான் இதைப் பத்தி அவகிட்ட பேசணுமா? பேசினா அவ என்கிட்ட சொல்லுவாளா? நான் அப்படி நினைக்கல. அவ தான் சொன்னாளே, காரணத்தை நான் தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இல்லைன்னு...! ஏதாவது ஒரு டிடெக்டிவ் ஏஜெண்டை அப்பாயிண்ட் பண்ணலாமா? இல்ல... என் பொண்டாட்டியை நான் விட்டுக் கொடுக்கிற மாதிரி ஆயிடும். என் மனசு நிம்மதியா இல்ல. ஏன் என்னால ஹாசினி மாதிரி நிம்மதியா இருக்க முடியல? எனக்குப் பதில் கிடைக்கல. அதுக்கப்புறம் நான் எப்ப தூங்கினேன்னு எனக்குத் தெரியல.
அடுத்த நாள்
வழக்கம்போல தூக்கத்திலிருந்து கண் முழிச்சேன். ஆனா, அந்த நாள் எனக்கு வழக்கமான நாளா இருக்காதுன்னு எனக்குத் தெரியும் ஏன்னா எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சு. ஹாசினி தூங்கிட்டு இருந்த சோபாவை நோக்கி என் பார்வை திரும்புச்சி. அவ இன்னும் தூங்கிக்கிட்டு தான் இருந்தா, அவ கட்டியிருந்த புடவையோட முந்தானையை போத்திக்கிட்டு. அவ போட்டுக்கிட்டு இருந்த நகை எல்லாம் அவ படுத்திருந்த சோபாவுக்கு எதிர்ல இருந்த டீபாய் மேலே இருந்தது. அது அவ தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ணி இருக்கணும். அவளைக் குத்தி இருக்கணும். அதனால அவ நடு ராத்திரியில அதையெல்லாம் கழட்டி வச்சிருக்கா போலருக்கு. அங்க இருந்த அவ்வளவு நகையையும் அவ போட்டுக்கிட்டு இருந்தான்னு என்னால நம்ப முடியல... அது குறைஞ்ச து முக்கா கிலோ இருக்கும். எல்லாம் பயங்கர காஸ்ட்லியான, விதவிதமான நவரத்தினக் கல் பதித்த செட்.அவ எனக்கு எதிர்பக்கம் படுத்திருந்ததால அவ முகத்தை என்னால பார்க்க முடியல. சத்தம் போடாம என் ரூம் கதவோட தாழ்ப்பாலைத் திறந்து விட்டுட்டு, பாத்ரூமுக்குப் போய் ஃபிரஷ் ஆனேன். எங்க வீட்ல இருந்து யாராவது வந்து கதவைத் தட்டுவாங்க. ஹாசினி யோட தூக்கம் டிஸ்டர்ப் ஆக வேண்டாம்னு தான் கதவைத் திறந்தேன்.
என்னோட ஜாகிங் ஷூவை எடுத்துக்கிட்டு நான் ஜாக்கிங்குக்குப் போயிட்டேன்.
ஒன்னறை மணி நேரம் கழிச்சு நான் என் வீட்டுக்கு வந்தப்போ, என் வீடு பயங்கர பதட்டமாவும் பரபரப்பாவும் இருந்தது. ஒட்டுமொத்த குடும்பமும் லிவிங் ரூம்ல இருந்தாங்க. எல்லாரும் கையில ஃபோனை வச்சுக்கிட்டு, ஏதோ ஒரு நம்பருக்கு ட்ரை பண்ணிக்கிட்டே இருந்தாங்க. என்னை ஜாகிங் டிரஸ்ல பாத்த உடனே, எல்லார் முகத்துலயும் ஒரு எரிச்சல் தெரிஞ்சிது. அதுக்கு காரணம், என்னை வீட்ல காணாம எல்லாரும் பீதி ஆயிட்டாங்க... நான் வீட்டை விட்டு ஓடிப் போயிட்டேன்னு நினைச்சுட்டாங்க.தொடரும்...
Bạn đang đọc truyện trên: Truyen3h.Co