5 பளிங்குச் சிலை
5 பளிங்குச் சிலை
என் ஃபேமிலியில இருந்தவங்க எல்லாரும் ஏன் அப்படி டென்ஷனா இருந்தாங்கன்னு எனக்கு முதல்ல புரியல. அவங்க கிட்ட இருந்த பதட்டம் எனக்கும் தொத்திக்கிச்சு. ஹாசினி வீட்டை விட்டு ஓடிட்டாளோன்னு எனக்குச் சந்தேகம் வந்தது. கல்யாணம் ஆன அடுத்த நாளே, கட்டின பொண்டாட்டி ஓடிப் போயிட்டா அது ஒரு ஆம்பளைக்கு எவ்வளவு பெரிய அவமானம்! ஆனா அவங்க பதட்டத்துக்குக் காரணம் என்னன்னு தெரிஞ்சப்போ, எனக்கு வாய்விட்டு சிரிக்கத் தோணிச்சு. நான் ஓடிட்டேன்னு எல்லாரும் நினைச்சிருக்காங்க.
என்கிட்ட வந்த எங்க அக்கா,]
"என்னடா பண்ணி வச்சிருக்க? கல்யாணமான அடுத்த நாள் யாராவது ஜாக்கிங் போவாங்களா?" ன்னு கேட்டாங்க.
"ஏன்கா? அதுல என்ன தப்பு?"
எங்க அக்கா தலையில அடிச்சுக்கிட்டாங்க.
என்கிட்ட வந்த எங்க அப்பா,
"உன்னோட வெட்டிங் ஸ்டேட்டஸ் பத்தி எல்லாருக்கும் தெரியனுமான்னு?" என் மேல சீறி விழுந்தார்.
"டாட், இதுல என்னோட வெட்டிங் ஸ்டேட்டஸ் பத்தி யோசிக்க என்ன இருக்கு?"
"இது உனக்கு டூ மச்சா தெரியலையா, கெளதம்? உன்னை ஃபோர்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணி வச்சதா என்னை நினைக்க வைக்காத" ன்னு சொன்ன அவரை, ஒன்னும் சொல்லாம நான் அப்படியே பார்த்துக்கிட்டு நின்னேன்.அப்போ என்கிட்ட வந்த எங்க அம்மா,
"எல்லாரும் போங்க," அப்படின்னு சொல்லிட்டு, என் கையைப் பிடிச்சு கிச்சனுக்கு இழுத்துகிட்டு போனாங்க. எதுவும் சொல்லாம, என்னை கையெடுத்து கும்பிட்டு, எனக்கு அதிர்ச்சி கொடுத்தாங்க.
"உன்னைக் கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சதுக்காக ரொம்ப சாரி. ஆனா தயவு செஞ்சு எங்களை இந்த மாதிரி சங்கடப்படுத்தாத. இது உன் தங்கச்சியோட வாழ்க்கையும் நம்ம குடும்பத்தோட சந்தோஷமும் சார்ந்த விஷயம். எங்களுக்கு வேற வழி இருக்கல. அதனால தான் உனக்கு இந்தக் கல்யாணம் பண்ணி வச்சோம்."
எங்க அம்மா இவ்வளவு எமோஷனலா பேசுற அளவுக்கு அப்படி நான் என்ன பண்ணேன்னு எனக்குப் புரியல.
"இப்போ எதுக்காக, மாம் இதெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கீங்க?"
"அவ அரசு குடும்பத்து பொண்ணு. உங்க முதல் ராத்திரி முடிஞ்சதுக்கு அடுத்த நாள் நீ வீட்டில் இல்லைனா அவ என்ன நினைப்பா? ஒருவேளை, அவங்க அப்பா அவளுக்கு ஃபோன் பண்ணி, நீ கல்யாணமான அடுத்த நாளே வீட்ல இல்லாம காணாம போயிட்டேன்னு சொல்லியிருந்தா என்ன ஆகி இருக்கும்? ஜாக்கிங் போறேன்னு நீ யார்கிட்டயும் சொல்லிட்டும் போகல. நீ வீட்ல இல்லனா நாங்க என்னடா நினைப்போம்?"
"மாம், நான் தினமும் ஜாகிங் போறவன் தானே?"
"உங்க ரெண்டு பேருக்கும் இடையில 'எதுவுமே' நடக்கலன்னு எல்லாருக்கும் தெரியணுமா?"
எனக்கு சுருக்குன்னு ஆயிடுச்சுங்க.
"முதல் ராத்திரி முடிஞ்ச உடனே, எவன்டா ஜாகிங் போவான்?" னு நேரடியாவே கேட்டாங்க என் அம்மா.
அப்போ தான் எனக்கு விஷயத்தோட ஆழமே புரிஞ்சது. நான் செஞ்சது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்!
"உனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இருக்கா இல்லையான்னு உங்க அப்பா என்னைக் கேட்டாரு," ன்னு அம்மா வருத்தத்தோட சொன்னாங்க.பாருடா! இந்தக் கேள்வியை எப்ப கேட்கணும்னு எங்க அப்பாவுக்குத் தோணியிருக்கு... எனக்குச் சிரிப்பு தான் வந்தது. கல்யாணத்தைப் பண்ணி வச்சதுக்கு பிறகு, எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இருக்கான்னு எங்க அப்பா யோசிக்கிறாரு. உண்மையிலேயே, அந்தக் கேள்விக்கு எனக்கும் கூட பதில் வேணும் தான்.
"அவர் கேட்டதுக்கு நீங்க என்ன சொன்னிங்க?"
"இந்தக் கேள்வியை எப்ப கேக்குறாரு? இதையெல்லாம் யோசிக்கிற நேரமா இது? நான் அவரைத் தேவையில்லாம பேச வேண்டாம்னு சொன்னேன். நம்ம பொண்ணு அவங்க வீட்ல வாழப் போயிருக்கா. நம்ம பேசுற ஒரு வார்த்தை கூட அவ சந்தோஷத்தைக் கெடுக்கும்." அப்படின்னு எங்க அம்மா என் முகத்தைப் பார்க்காம சொன்னாங்க.
அவங்க பதில் சொன்னது எங்க அப்பாவுக்கு மட்டும் இல்ல, எனக்கும் தான்னு எனக்குப் புரிந்தது.
"இது உன்னோட வாழ்க்கை கெளதம். தெரிஞ்சோ, தெரியாமலயோ நாங்க உன்னை அதுல தள்ளி விட்டுட்டோம். நீ ஏதாவது செஞ்சி எங்களைச் சங்கடப்படுத்தாத. இதை சுமுகமா மாத்தப் பாரு."
சுமூகமா மாத்துறதா? யார் கூட? ஹாசினி கூடவா? எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. ஹாசினிக்கும் இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு நான் அவங்க கிட்ட சொல்றதா, வேண்டாமா ? எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு ஏற்கனவே எங்க அம்மா வருத்தத்துல இருக்காங்க. ஹாசினிக்கும் விருப்பமில்லன்னு அவங்களுக்குத் தெரிஞ்சா, அவங்க நிலைமை என்ன ஆகும்?
"சாரி மாம். நான் இதை வேணும்னு செய்யல. இப்படி மறுபடி நடக்காது." ன்னு அவங்களைச் சமாதானப்படுத்த முயற்சி பண்ணேன்.
"என்னை மன்னிச்சிடு, கெளதம். பிள்ளைக்கு சப்போர்ட் பண்ண முடியாத, ஒரு கையாளாகாத அம்மா நான்." என்னைக் கட்டிக்கிட்டு அம்மா அழுதாங்க. நான் ரொம்ப பலவீனமா உணர்ந்தேன்.
"அப்படிச் சொல்லாதீங்க மாம். உங்க பிள்ளைக்குப் பலத்தை கொடுக்கிற அம்மா நீங்க. நீங்க தாம்மா என்னோட பலம். வருத்தப்படாதீங்க. உங்க பிள்ளையை நம்புங்க. அவன் எல்லாத்தையும் சரி பண்ணுவான்."
அம்மா சிரிச்சாங்க. என் அம்மாவோட கண்ணீரைச் சிரிப்பா மாத்துன அந்த நொடி, நான் ஆசீர்வதிக்கப்பட்டவனா உணர்ந்தேன்.
"நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க." அப்படின்னு அவங்களுக்கு அவங்களை உற்சாகப்படுத்த கேட்டேன்.
"நீ ஹாசினியோட அவங்களோட புது வீட்டுக்குப் போகணும்."
"அதை நீங்க ஏற்கனவே சொல்லிட்டீங்க. அப்புறம்?"
"அவ ஒரு இளவரசி. அவ கொஞ்சம் அப்படி இப்படித் தான் இருப்பா..." என்று தயக்கத்தோடு நிறுத்தினார்.
அவ என்கிட்ட ஃபோன்ல பேசினது என் தலையில எதிரொலித்தது.
"எனக்குத் தெரியும், உனக்கு தன்மானம் அதிகம். இப்போ நீ அவளோட புருஷன். அவளோட வாழ்க்கை உன்னை தான் சார்ந்து இருக்கு. இந்தப் புது வாழ்க்கையில உன்னை பொருத்திக்க உனக்குக் கஷ்டமா தான் இருக்கும்..." என இழுத்தார்.
"நான் முடிஞ்ச அளவுக்கு ட்ரை பண்றேன்." ன்னு சொன்னேன்.சந்தோஷமா அம்மா என் நெத்தியில முத்தம் கொடுத்தாங்க."போய் குளிச்சிட்டு வா..."
'ம்ம்ம்..."
நான் கிச்சனை விட்டு வெளியில வந்தேன்.
"நீ வீட்டை விட்டு ஓடிப் போயிட்டேன்னு நினைச்சேன்... மறுபடி வந்துட்டியா?" ன்னு என்னோட சித்தப்பா மகன் சீலன் என் காலை வாரினான்.
"அப்படியெல்லாம் நீ சந்தோஷமா இருக்க சான்ஸ் கொடுப்பேன்னு நினைக்காதே," ன்னு கவுண்டர் கொடுத்துக்கிட்டே என் ரூமுக்குப் போனேன். அது எல்லாரையும் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுச்சு.
நான் என் ரூமுக்கு வந்தப்போ, அது உள் பக்கமா பூட்டி இருந்தது. கதவைத் தட்டினேன். ஹாசினி கதவைத் திறந்தா. ஜாகிங் டிரஸ்ல இருந்த என்னை சாதாரணமா பாத்தா.
ஆனா நான் இருந்த நிலைமையே வேற...
அவளைப் பார்த்து நான் அசந்து போய் நின்னேன். அவ நியான் ப்ளூ ஸ்டோன் ஒர்க் பண்ண, டர்கிஷ் ப்ளூ ஸ்லீவ்லெஸ், சின்ட்ரெல்லா கவுனும், அதுக்கு ஏத்த மாதிரி ப்ளூ டைமன் நெக்லஸும், மேட்சிங் இயர் ரிங்கும் போட்டுக்கிட்டு இருந்தா பாருங்க... அப்ப்ப்பா... அவ தலையில வச்சிருந்த க்ளிப் கூட ப்ளூ ஸ்டோன். அது கூட வைரமா இருக்குமோன்னு எனக்கு ஆச்சரியமா இருந்தது. அவ கையில இருந்த நீல கல் பிரேஸ்லெட்டை விட, அவளோட கை அதிகமா மின்னுச்சு. அவ இடது கையில இருந்த ரோலக்ஸ் வாட்ச், அவளை மாதிரியே அமர்க்களமா இருந்துது. இந்த எல்லா நீலத்துக்கும் நடுவுல, அவளோட வெள்ளை முகம், பளிச்சுன்னு இருந்துது. அவ பிரம்மனோட லைஃப் டைம் ப்ராஜெக்ட்டா இருப்பாளோ? வேணும்கிற நேரம் எடுத்து, அவசரமே காட்டாம, கொஞ்சம் கொஞ்சமா அவளை பிரம்மன் செதுக்கி இருக்கணும். பாக்குறவங்க யாரா இருந்தாலும், நின்னு ரசிக்கிற அளவுக்கு, ஒரு பளிங்குச் சிலை மாதிரி இருந்தா.நான் அவளை அப்படி உறுத்து பார்த்துகிட்டு இருந்ததை, புளு ஐ ஷேட் போட்ட அவ அழகான கண்ணை சுருக்கி பாத்தா. பின்ன என்ன? இன்ட்ரஸ்ட் இல்லன்னு சொல்லிட்டு, பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பார்த்த மாதிரி, வாயைப் பிளந்துக்கிட்டு அவளை அப்படிப் பார்த்தா வேற என்ன செய்வா?
மறுபடியும் டிரெஸ்ஸிங் டேபிளுக்குப் போய், நெத்தியில பொட்டு வச்சுகிட்டா... சந்தேகமில்லாம, அதுவும் நீல கலர் தான்.இதுக்கு அப்புறம் அவளை எப்பவும் அந்த மாதிரி முழுங்கற மாதிரி பாக்குறது இல்லன்னு ஒரு முடிவுக்கு வந்து, சபதம் எடுத்துக்கிட்டேன்.என்னோட கபோர்டைத் திறந்த நான், கொஞ்ச நேரம் ஒன்னும் புரியாம நின்னேன். இப்போ நான் என்ன ட்ரெஸ் போட்டுக்கிறது? நான் எதை போட்டாலும் ஹாசினிக்கு ஈக்குவலா இருக்கப்போறதில்ல. அப்புறம் என்ன குழப்பம்? என்னோட சூட் ப்ளூ கலரா இல்லாம பார்த்துகிட்டேன். நான் அவளுக்கு மேட்சிங்கா இருக்க ட்ரை பண்றேன்னு அவ நினைக்கக் கூடாதுல்ல? என்னோட லைட் கிரே சூட்டை எடுத்துக்கிட்டு பாத்ரூமுக்குப் போனேன்.
நான் வெளிய வந்தப்போ, அவளோட கல்யாண புடவை, நகை, எல்லாத்தையும் அவ சூட்கேஸ்ல அடுக்கிக்கிட்டு இருந்தா. என்னைத் திரும்பிக் கூடக் பாக்கல.
அப்போ அக்காவும் அகிலாவும் வந்து எங்க ரூம் கதவைத் தட்டினாங்க, அந்த கதவு திறந்தே இருந்த போதும்...
"உள்ள வாங்கக்கா." ன்னு சொன்ன உடனே உள்ள வந்தவங்க, ஹாசினியைப் பார்த்து திகைச்சிப் போனாங்க. ஆனா அவங்க என்னை மாதிரி இல்ல... மனசுல நினைச்சதை வெளியில சொன்னாங்க.
"வாவ் ஹாசினி... நீ உண்மையிலேயே இளவரசி மாதிரி இருக்க..."
ஹாசினி அவளோடு உதட்டை லேசா இடது பக்கம் இழுத்தா. அவ கொடுத்த அந்த எக்ஸ்பிரஷனுக்கு என்ன அர்த்தம்னு எனக்குப் புரியல. ஏன்னா அது நிச்சயமா ஸ்மைல் இல்ல.
அம்மா கிட்ட சொல்லி உனக்குச் சுத்தி போடச் சொல்லணும். யார் கண்ணும் பட்டுடக் கூடாது." ன்னு அக்கா சொன்னப்போ லேசா ஸ்மைல் பண்ணா."உன்னை பார்த்து கௌதம் எப்படி இன்னும் மயங்கி விழாம இருக்கான்னு எனக்குயா தெரியல," ன்னு சொல்லி, அகிலா கெக்கபெக்கேன்னு சிரிச்சா.ஹாசினி என்னை பாக்காம, அவ கையில இருந்த பிரேஸ்லெட்டைப் பார்த்தா. அகிலா ஏன் அப்படிச் சொன்னான்னு எனக்குத் தெரியும். அவளுக்கு என்னோட டேஸ்ட் நல்லாத் தெரியும். நான் அழகா இருக்கிற எல்லாத்தையும் ரொம்ப ஓப்பனா ரசிப்பேன்.
"உனக்குத் தெரியுமா ஹாஷினி, கௌதம் ஒரு ஆர்டிஸ்ட். இங்க இருக்கிற எல்லா பெயிண்டிங்ஸும் அவன் வரைஞ்சது தான்..."
ஹாசினி தன்னோட புருவத்தையும் தலையையும் உயர்த்தி, அது நீயா? அப்படிங்கற மாதிரி ஒரு பார்வை பார்த்தா. அடுத்த நொடி அவ முகம் சகஜ நிலைமைக்கு மாறிப் போச்சு. ஆனா அவளோட கண் என்னோட பெயிண்டிங்ஸ் மேல இருந்தது.
"உனக்குப் பசிக்குதா ஹாசினி?" என் அக்கா கேட்டாங்க
"இல்ல..."
"அது தான் எங்க வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் அவ பேசின முதல் வார்த்தை. அவளோட குரல் ரொம்ப ஸ்வீட்டா இருந்தாலும், அவ சொன்ன விதத்துல ஒரு மிடுக்கு இருந்தது."
"உங்க வீட்ல நீங்க என்ன சாப்பிடுவீங்கன்னு எங்களுக்குத் தெரியாது. உங்க குடும்ப வழக்கம்..." ன்னு மேல பேச போன அக்காவைத் தடுத்து,
"அதைப் பத்தி நீங்க கவலைப்பட தேவையில்ல. உங்களால அதை ஃபாலோ பண்ண முடியாது." அப்படின்னு அதே மிடுக்கோட சொன்னா.
அக்காவும் தங்கச்சியும் திகைச்சி போனாங்க. நானும் தான்! அவ என்ன அர்த்தத்துல அதை சொன்னான்னு எனக்குப் புரியல. அக்கா சிரிச்சபடி தலையசைச்சாங்க.
"போகலாமா?" அப்படின்னு அக்கா கேட்டவுடனே, அவ தலையசைச்சு அவங்களோட போனா. நானும் அவங்களோட போனேன்.
நாங்க கீழ வந்தப்போ எங்க குடும்பத்துல இருந்த எல்லாரும் வாயைப் பிளந்துகிட்டு ஹாசினியைப் பார்த்தாங்க. எங்க அம்மா முகத்துல சந்தோஷம் தாண்டவம் ஆடுச்சு. அவங்க மருமக அவ்வளவு அழகா இருந்தா ஏன் சந்தோஷப்பட மாட்டாங்க? அவங்களுக்கு ஹாசினியை ரொம்ப பிடிச்சிருந்துதுன்னு என்னால உணர முடிஞ்சது. நான் நேரா டைனிங் டேபிளுக்குப் போனேன், எனக்குப் பசி இல்லனாலும்.
சீலன் என்னை அவன் பக்கம் இழுத்து,
"இவ்ளோ அழகான ஒய்ஃப் கிடைக்க நீ ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும், கௌதம்." ன்னு சொல்லிட்டு பைத்தியக்காரன் மாதிரி பல்லைக் காட்டினான்.
"அவ உன்னோட அண்ணி. ஞாபகம் இருக்குல்ல?" ன்னு கேட்டுக்கிட்டு, நான் டைனிங் சேர்ல உக்காந்தேன். சத்தியமா, அதை அவனைக் கிண்டல் பண்ணத் தான் நான் சொன்னேன். ஆனா அந்த லூசு, அதை என் பக்கம் திருப்பிட்டான்.
"ஒ... பொண்டாட்டி மேல பொசசிவ் ஆயாச்சா?"
என்னோட பொசசிவ் நேச்சர் தெரிஞ்சி அவன் அதை சொல்லல. அவன் என்னைக் கிண்டல் பண்ணத்தான் அதை சொன்னான். இதுவரைக்கும் நான் என்னோட பொசசிவ் பக்கத்தை யாருக்கும் காட்டினதில்ல. அதை காட்ட எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கல. எனக்குப் பொஸசிவ்னஸ் இருக்கான்னு கூட அவங்களுக்குத் தெரியாது. ஆனா, இது பொண்டாட்டி பத்தின விஷயம்.என்னோட பார்வை என் ஒய்ஃப் பக்கம் போச்சு. இதுவரைக்கும் என் மனசுல இல்லாத ஏதோ ஒன்னு என் புத்தியைத் தட்டுச்சு. அவ என் ஒய்ஃப். அவளுக்குப் புருஷனா இருந்துக்கிட்டு அவ மேல பொசசிவா இருக்கிறது நார்மல் தான். ஆனா விருப்பமில்லாத என் மனைவி மேல நான் அப்படி இருக்க முடியுமான்னு எனக்குத் தெரியல.
வானம் படத்துல, சிம்பு சொன்னது ஞாபகம் வந்தது.என்ன வாழ்க்கை டா...!தொடரும்..
Bạn đang đọc truyện trên: Truyen3h.Co