Truyen3h.Co

கல்யாணம் டூ காதல்

8 குழப்பத்தில் சேதுபதியின் குடும்பம்

NiranjanaNepol

8 குழப்பத்தில் சேதுபதியின் குடும்பம்

மாடியில இருந்து கீழே இறங்கி வந்துகிட்டு இருந்த ராஜேந்திர சேதுபதி, நாங்க ரெண்டு பேரும் கையை கோர்த்துக்கிட்டு வர்றதை நம்ப முடியாம பார்த்துக்கிட்டு நின்னார். தன்னை சமாளிசிக்கிட்டு,

" வெல்கம் கௌத்தம்" ன்னு சொன்னாரு.

நான் அவரைப் பார்த்து சிநேகமா சிரிச்சேன்.

" இன்னைக்கு இங்க வர மாட்டேன்னு ஏன் சூர்யா கிட்ட சொன்னே? " ன்னு ஹாசினி கிட்ட கேட்டாரு.

" நான் கௌத்தம் கூட மினி பேலஸுக்கு போகலாம்னு நினைச்சுகிட்டு இருந்தேன்"

அவ முதல் தடவை என் பேரைச் சொன்னா. அது சாதாரணமா இருந்தாலும்கேக்க நல்லா இருந்தது.

" ஆனா இது வழக்கம், " சேதுபதி சொன்னார்


"அதனால தான் வந்திருக்கேன்"

சேதுபதி லேசா தலையசைச்சார்

" நான் கிளம்புறேன். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு," ன்னு சொன்னேன்

"என்ன அவசரம் கௌத்தம்? என் ரூம்மை நீங்க பாக்க வேண்டாமா?" 

ஹாசினியோட கேள்வி என்னை இன்னும் குழப்புச்சு. இந்தப் பொண்ணு என்னை பைத்தியக்காரனா ஆகாம விடமாட்டா போலருக்கு.

" போங்க கௌதம். நீங்க அவளோட ஹஸ்பண்ட் இல்லையா.. " ஹாசினியை பார்த்துக்கிட்டே சொன்னாரு சேதுபதி.

"பரவால்ல அங்கிள்... "

"அதெல்லாம் முடியாது. என்கூட வாங்க." என் கையை பிடிச்சு மாடிக்கு கூட்டிக்கிட்டு போனா ஹாசினி.

அந்த அகலமான பலிங்கு கல் படிக்கட்டை கடந்து, ஒரு பெரிய காரிடாரை தாண்டி, பயங்கர பட்டாடோபமா இருந்த ஒரு பெரிய ரூமுக்கு போனோம். ஹாசினி கதவை சாத்தி தாழ்பால் போட்டா. நான் என் கையை கட்டிக்கிட்டு அவளை பார்த்துகிட்டு நின்னேன். அவளும் என்னை மாதிரியே அவங்க அப்பா அம்மா முன்னாடி நடிக்கிறான்னு எனக்கு தெரியும்.

"உங்க ஹெல்ப்புக்கு தேங்க்ஸ்," என் முகத்தைப் பார்க்காம லேசா சிரிச்ச படி சொன்னா.

ஹெல்ப்பா? எனக்கு சங்கடமா மட்டும் இல்ல, குழப்பமாவும் இருந்தது.

"என்னால உன்னை புரிஞ்சுக்க முடியல," என்னை கண்ட்ரோல் பண்ண முடியாம சொல்லிட்டேன்.

"உங்களால முடியாது... யாராலயுமே முடியாது. நீங்க சொன்ன வார்த்தையை நான் பயன்படுத்திக்கிட்டேன். நீங்க தானே சொன்னீங்க எனக்கு ஹெல்ப் பண்ண ரெடியா இருக்கேன்னு... எதுவாயிருந்தாலும் பரவாயில்லைன்னு சொன்னீங்களே?" அவ என் கண்ணை பார்த்து சொன்னா.

" ஆமாம், சொன்னேன், அதனால?

"ஒருவேளை நீங்க கொடுத்த வாக்கை திருப்பி எடுத்துக்கணும்னு தோணுச்சுன்னா, தாராளமா செய்யலாம்னு." பிளைனா சொன்னா.

வாக்கைத் திருப்பி எடுத்துக்கிறதா? அவ எந்த அர்த்தத்தில் சொன்னான்னு புரியாம நான் அவளையே பார்த்துகிட்டு இருந்தேன். அப்படின்னா, என்னோட ஹெல்ப்பை கேக்குறேன் பேர்வழின்னு அவ இதே மாதிரி செஞ்சுக்கிட்டே இருக்கப் போறாளா?

" ஒரு தடவை வாக்கு கொடுத்துட்டா அதை திருப்பி எடுத்துக்கிற பழக்கம் எனக்கு கிடையாது. எந்த ஹெல்பா இருந்தாலும் நான் செய்யத் தயாரா இருக்கேன். எதுவாயிருந்தாலும்... " நான் சொன்னதையே திருப்பி, ஆனா அழுத்தி சொன்னேன்.

தன்னோட புருவத்தை உயர்த்தி, உதடை அழுத்தி, லேசா தலையசச்சா. அது என்ன மாதிரியான எக்ஸ்பிரஷன்னு எனக்குப் புரியல. நான் மறுபடியும் குழம்பினேன்.

பெரிய பெல்ஜியம் கண்ணாடியோட இருந்த, தேக்கு மரத்தால ஆன பெரிய டிரெஸ்ஸிங் டேபிளுக்கு போய், அதோட ட்ராயரை இழுத்தா. அதுக்குள்ள நூத்துக்கணக்கான லிப்ஸ்டிக்கும், லிப்க்லாசம் அழகா அடுக்கி இருந்தது. அதுல இருந்து பிங்க் கலர் லிப்ஸ்டிக்கை எடுத்து, அதை மறுபடியும் தன் உதட்டுல அப்ளை பண்ணா. அவ தன்னோட ரெண்டு விரலையும் உதட்டுல அழுத்தும் போது எனக்கு ஒண்ணுமே புரியல. அவ தன் விரல்ல ஒட்டியிருந்த லிப்ஸ்டிக் மார்க்கை பார்த்து திருப்தியோட சிரிச்சா.

அப்போ யாரோ கதவை தட்ற சத்தம் கேட்டது. கதவு கிட்ட போறதுக்கு பதில் ஹாசினி என்கிட்ட வந்தா.

" மறுபடியும் உங்க ஹெல்ப்புக்கு தேங்க்ஸ்ன்னு சொன்னா.

அவர் தேங்க்ஸ் சொல்ற அளவுக்கு இப்போ நான் என்ன பண்ணேன்னு எனக்கு புரியல. அவர் விரலை என் கன்னத்தில் அழுத்திட்டு, போய் கதவை திறந்தா. நான் என் முகத்தை கண்ணாடியில பார்த்தேன். உதடு ஷேப்ல, லிப்ஸ்டிக் மார்க் என் கண்ணத்துல இருந்தது. நான் அதிர்ச்சியோட ஹாசினியை பார்த்தேன். அவ ஏற்கனவே கதவை திறந்துட்டா. சூர்யாவும் உள்ள வந்துட்டான். என்னை பார்த்து அவனோட கண்ணு அகலமா விரிஞ்சிது... என்னை பார்த்து இல்ல... என் கன்னத்துல இருந்த லிப்ஸ்டிக் மார்க்கை பார்த்து! நான் அதை அவசரமா அழிச்சதை பார்த்து அவன் வெட்கத்தோட சிரிச்சான். அவன் தங்கச்சி என்னை கிஸ் பண்ணிட்டானு நினைச்சிட்டான். டேமிட்... இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல?

"ஹாய் கௌதம்" சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியாம சொன்னான் சூர்யா.

"ஹாய்..." னு நான் ஹாசினியை பார்த்துக்கிட்டே சொன்னேன்

"நந்தினி சொன்னா நீங்க ரெண்டு பேரும் ரொம்ப க்ளோஸாம்..." சூர்யா அழகா சிரிச்சான்.

"க்ளோசா இருந்தோம்..." நான் சொன்ன உடனே, அண்ணனும் தங்கச்சியும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துக்கிட்டாங்க

"இருந்தோம்னா என்ன அர்த்தம்?"

"இப்போ தான் அவளுக்கு நீங்க இருக்கீங்களேன்னு," சொன்னேன்.

"அதுக்காக நீங்க அவளுக்கு குளோசா இருக்கக் கூடாதுன்னு அர்த்தம் இல்ல. இன்ஃபாக்ட், இப்ப நம்ம எல்லாருமே க்ளோஸ் ஆயிட்டோம். " எங்களோட உறவுகுள்ள தன்னையும் இணைச்சுக்கிட்டான் சூர்யா. அது எனக்கு பிடிச்சிருந்தது.

"நான் கிளம்புறேன்" னு சொன்னேன்.

அங்க இருந்து, ஹாசினியோட விசித்திரமான நடவடிக்கையால இன்னு குழம்புறதுக்கு நான் தயாரா இல்ல.

"அடிக்கடி வாங்க" ன்னு சொன்னா சூர்யா.

"கண்டிப்பா வரேன். நீங்களும் வாங்க"ன்னு சொன்னேன்.

"நிச்சயமா..."

நான் வெளியில நடந்தேன் ஹாசினியும் சூர்யாவும் என்னை ஃபாலோ பண்ணி வந்தாங்க.

ஹாசினியைப் பத்தி யோசிச்சுக்கிட்டே நடந்தேன். அவளோட நடவடிக்கையை எப்படி எடுத்துக்கறதுன்னு எனக்கு புரியல. அவளோட அண்ணனை சந்தோஷப்படுத்த நினைக்கிறா. அதனால தான் லிப்ஸ்டிக் கரையை என் கன்னத்தில் ஒட்டிவிட்டா. ஆனா, நாங்க பேலஸ்க்குள்ள வர்றதுகு முன்னாடி அவ என்கிட்ட ஏன் அவ்வளவு ஸ்வீட்டா பேசினா? யாராவது எங்களை நோட்டீஸ் பண்ணிக்கிட்டு இருந்தாங்களா? எங்க ரிலேஷன்ஷிப்புக்கு சான்ஸ் கொடுக்க அவ விரும்பல. ஆனா அவங்க அப்பா அம்மா மட்டும் நாங்க சந்தோஷமா இருக்கிறதா நம்பணும்னு நினைக்கிறா. இது என்ன கொடுமை? எதுக்காக இப்படி எல்லாம் செய்றா? இதுக்கு நான் என்ன செய்யணும் எனக்கு புரியல.

அண்ணனும் தங்கச்சியும் பேசுறத கேட்டு என் நடையோட வேகம் குறைஞ்சிது.

"நீ கௌத்தமை ஏத்துக்கிட்டேன்னு என்னால நம்பவே முடியல. இது எப்படி நடந்தது?"ன்னு கேட்டான் சூர்யா

"அது எப்படி உனக்கு தெரியும்?"னு அவனையே திருப்பி கேள்வி கேட்டா, அவனை அப்படி நினைக்க வச்சதே அவ தான்னு காட்டிக்காம.

"நான் உன்னோட அண்ணன். அதை மறந்துடாத." ன்னு சொன்ன அவனை நினைச்சி பரிதாப படாம என்னால இருக்க முடியல.

"அண்ணி உன் மனசுல எப்படி இடம் பிடிச்சாங்க?"

"அவ பார்க்க நம்ம அம்மா மாதிரியே இருக்கா"

"எனக்கு கௌத்தமை ரொம்ப பிடிச்சிருக்கு. ஏன்னா அவர் நம்ம அப்பா மாதிரி இல்ல," ன்னு சொல்லி அவ சிரிச்சா

அவ சொன்ன பொய்யை கேட்டு, 'புளுகு மூட்டை' ன்னு அவ கன்னத்துல இடிக்கனும்னு எனக்கு தோணுச்சு. அவள் சொன்னது எவ்வளவு பெரிய பொய்! அவளுக்கு என்னை பிடிச்சிருக்காம்!

"நீ ரொம்ப ஓவர்"ன்னு சொன்னான் சூர்யா

"எப்பவுமே..."ன்னு சொல்லி அவ கலகலன்னு, ஆனா மெதுவா சிரிச்சா.நான் ரெண்டு விஷயத்தை தெரிஞ்சுகிட்டேன். ஹாசினி சூர்யாவை ரொம்ப நேசிக்கிறா. அவங்க அப்பாவை ரொம்ப வெறுக்கிறா. சூர்யாவோட அவளுக்கு நல்ல பிணைப்பு இருந்தது, எனக்கு என் தங்கையோடு இருந்த மாதிரி.


நான் கீழ வந்தப்போ, மிஸஸ் சேதுபதியும் அங்க இருந்தாங்க. கால் மேல கால போட்டுகிட்டு பந்தாவா உக்காந்து இருந்தாங்க.


"ஹலோ கௌத்தம்"ன்னு சொன்னாங்க

"ஹலோ ஆன்டி"ன்னு நானும் ஃபார்மலா சொன்னேன்

"கௌத்தம், உங்க கன்னத்துல சிகப்பா என்னமோ இருக்கு,"ன்னு சேதுபதி என் என் கன்னத்தை காட்டி சொன்னார்.

நான் ஆட்டோமேட்டிக்கா என் கன்னத்தை துடச்சேன், முதல்ல செஞ்சதை விட இன்னும் வேகமா, ஹாசினியை பார்த்துகிட்டு தான். அவ என்னை பார்க்காமல் அவளோட வாட்சை பார்த்தா. சூர்யா பளிச்சுன்னு சிரிச்சான். சேதுபதியும் அவர் ஒய்ஃபும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டாங்க

"நான் கிளம்புறேன் அங்கிள்"

"என்ன அவசரம் கௌத்தம்? எங்களோட லன்ச் சாப்பிடுங்க" ன்னு மிஸஸ் சேதுபதி சொன்னாங்க

"பரவாயில்ல ஆன்ட்டி, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு."

"ஆமாம், நீ நீங்க உங்க ஃபேமிலியோட இருக்கணும்னு நினைப்பீங்க. இன்னைக்கு தானே நீங்க உங்க குடும்பத்தோட இருக்க போற கடைசி நாள்..."

நான் ஷாக் ஆயிட்டேன். கடைசி நாளா? அவங்க அப்படி சொன்னது எனக்கு சுத்தமா பிடிக்கல. கடைசி நாள்னு எதுவுமே கிடையாது, நான் எப்ப நினைச்சாலும் என் வீட்டுக்கு போவேன்னுன்னு சொல்லணும்னு எனக்கு தோணுச்சு. நான் அதை சொல்றதுக்கு முன்னாடி,

"மாம், லாஸ்ட்ன்னு கௌதமுக்கு எதுவும் கிடையாது. அவர் நினைச்சா அவங்க வீட்டுக்கு எப்ப வேணாலும் போகலாம்"ன்னு நான் சொல்ல நினைச்சதை சூர்யா சொன்னான்.

"யா யா யு ஆர் ரைட்," சிரிக்காம சொன்னாங்க மிஸஸ் சேதுபதி

"சீ யூ அங்கிள்"ன்னு சொல்லிட்டு நான் ஹாசினியை பார்த்தேன்.


வலிய சிரிச்சபடி அவ தலையசைச்சா. அது வலிய சிரிச்ச சிரிப்பு தான். ஏன்னு எனக்கு தெரியல. நான் அங்கிருந்து கிளம்பினேன். என் கார் கிட்ட போன உடனே அவ என்னை கேட்ட கேள்வி எனக்கு ஞாபகம் வந்தது

"நீங்க என்னை கூட்டிகிட்டு போக வருவீங்களா இல்ல நானே வந்துடவா?"நான் வந்து அவளை கூட்டிகிட்டு போகணும்னு அவன் நினைக்கிறாளா இல்லையான்னு தெரிஞ்சுக்க நினைச்சேன். மறுபடியும் உள்ள போக நினைச்சப்போ, சூர்யா பேசுறதைக் கேட்டு நின்னேன்.


"மாம், எதுக்காக நீங்க அப்படி சொன்னீங்க? உங்களுக்கு கௌத்தமை பத்தி நல்லா தெரியும் தானே? அவருக்கு அவங்க குடும்பம் தான் எல்லாமே. அவங்க ஃபேமிலியை விட்டு பிரியறத நினைச்சு அவர் எவ்வளவு வருத்தப்படுவாரு?"


"ஆனா அவர் அவங்க ஃபேமிலியை விட்டுட்டு போக ரெடியா இருக்காரு. அதை மறந்துடாத" ன்னு சொன்னாங்க மிஸஸ் சேதுபதி.


"அவருக்கு வேற சான்ஸ் கொடுக்கப்படல" ன்னு சொன்னான் 

சூர்யா.

"நான் என் குழந்தைகளை தவிர வேற எதையும் நினைக்க விரும்புறதில்ல, சூர்யா. எனக்கு நீங்க சந்தோஷமா இருக்கணும். உங்க சந்தோஷத்துக்காக நான் என்ன வேணா செய்வேன். அதனால தான் 100 கோடி செலவு பண்ணி ஹாசினிக்காக மினி பேலைஸை ரெடி பண்ணி இருக்கேன். அவ ஒரு இளவரசி. அவர் ஹாப்பியா இருக்கணும். அவ்வளவு தான்," ன்னு எமோஷனலா சொன்னாங்க.


"எனக்கு தெரியும், மாம்."


"உன்னை பத்தி எங்களுக்கு தெரியும், தேவா. எதுக்காக இவ்வளவு எமோஷனல் ஆகிற?" சேதுபதி கேட்டார்


"நான் உங்களை ஹர்ட் பண்ணி இருந்தா, சாரி மாம்," சூர்யா சொன்னான்.

உள்ள போற என் எண்ணத்தை நான் மாத்திக்கிட்டேன். எனக்கு அங்க போக பிடிக்கல. அந்த பொம்பள பேசுன விதம் எனக்கு பிடிக்கல. கண்டிஷனை போட்டு என்னை அவங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி வச்சதே அவங்க தான். அவங்க பொண்ணு ராணி மாதிரி இருக்கணும்னு நான் எங்க குடும்பத்தை விட்டு மினி பேலசுக்கு அவங்க மகளோட போகணும்னு சொன்னதும் அவங்க தான். அப்படி இருக்கும் போது, நான் என் குடும்பத்தை விட்டு பிரிய ரெடியா இருக்கேன்னு அவங்க எதுக்காக சொல்லணும்? என்னமோ நான் தான் வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு போற மாதிரி இல்ல இருக்குது அவங்க பேசினது! இதனால தான் ஹாசினி என்னை "நீ உன் தங்கச்சிக்காக மட்டும் தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டியா?" ன்னு கேட்டா போலருக்கு. அவளோட அப்பா அம்மா என்னை பத்தி அப்படி பேசினா, அவளும் அப்படித் தானே நினைப்பா? அவ என்னை சுயநலவாதி என்று நினைச்சதுல எந்த ஆச்சரியமும் இல்லை.

நான் அங்கிருந்து கிளம்பிடலாம்னு நெனச்சப்போ, ஹாசினி சூர்யாவை கூப்பிடுறது என் காதுல விழுந்தது. லேசா உள்ள எட்டிப் பார்த்தேன். ஹாசினி மாடியில நின்னுகிட்டு இருந்தா. சூர்யா அவகிட்ட போனான். எனக்கு மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருந்தது. ஏன்னா, அவங்க என்னை பத்தி பேசினதை அவ கேட்கல. நான் கிளம்பின உடனே அவ மாடிக்கு போயிருக்கணும். அது தெரிஞ்சப்போ எனக்கு கொஞ்சம் நிம்மதியாச்சு. ஹாசினி என்னை பத்தி தப்பா நினைச்சிடுவாளோன்னு நான் ஏன் வருத்தப்பட்டேன்னு எனக்கே புரியல.


எதுக்காக மிஸஸ் சேதுபதி திடீர்னு எமோஷனல் ஆனாங்க? அங்க எமோஷன் ஆகுறதுக்கு என்ன இருக்கு? என்கிட்ட அப்படி எல்லாம் பேச வேண்டாம்னு சூர்யா சொன்னான். அதுல என்ன தப்புன்னு அவன் அவங்க அம்மா கிட்ட மன்னிப்பு கேட்டான்? அவங்க அப்படி ஒன்னும் காயப் பட்டதாக எனக்கு தெரியல.


ஒரு நிமிஷம்! என் குடும்பம் தான் எனக்கு எல்லாம்னு அவங்களுக்கு எப்படி தெரியும்? எங்க அம்மா அப்பா அவங்ககிட்ட சொல்லி இருப்பாங்களா? என் குடும்பம் தான் எனக்கு எல்லாம்னு தெரிஞ்சதுக்கு பிறகும், நான் என் குடும்பத்தை விட்டுட்டு வரணும்னு அவங்க ஏன் நினைக்கிறாங்க? அதை தவிர்க்கவே முடியாத ஒரு கண்டிஷனா எதுக்காக அவங்க வச்சாங்க? அதை ஏன் கட்டாயப்படுத்தி எங்களை ஏத்துக்க வச்சாங்க? நான் ஹாசினியை கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் சூர்யா நந்தினியை கல்யாணம் பண்ணிக்குவான்னு அவங்க சொல்லல? ஏன் அப்படி சொன்னாங்க? என்னால புரிஞ்சுக்க முடியல. அந்த கேள்வியை எல்லாம் யோசிச்சுகிட்டே நான் அங்கிருந்து கிளம்பினேன்.


தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen3h.Co