Truyen3h.Co

கல்யாணம் டூ காதல்

9 ஃபீனிக்ஸ்

NiranjanaNepol

9 ஃபீனிக்ஸ்

என் தங்கச்சி அண்ட் காசின்ஸ் கூட டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு நான் வீட்டுக்கு வந்தேன். என் மாமியார் வீட்ல இருந்தவங்கள பத்தியும், அவங்களோட குழப்பமான நடவடிக்கையை பத்தியுமே என் மனசு யோசிச்சுகிட்டு இருந்தது. அந்த குழப்பத்துக்கு நடுவுல, ஹாசினியோட விரல் முத்தத்தையும் நான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். அதை நினைக்கும் போதெல்லாம் எனக்கு புல்லரிச்சது. என்னோட ஃபீலிங்ஸை நெனச்சு எனக்கே விசித்திரமா இருந்தது. எனக்கு கல்யாணத்துல விருப்பம் இருக்கல. எங்க குடும்பத்தை விட்டு போறதை நினைச்சு நான் ரொம்ப ஃபெட்டப்பா இருந்தேன். ஆனா ஹாசினியோட சில வார்த்தைகளை கேட்டதுக்கு அப்புறம், எனக்கு என்ன ஆச்சுனே தெரியல, அவ பேசினதெல்லாம் எனக்கு சாதகமாக இல்லாத போதும்...! நான் இப்படி இருந்ததில்ல. நான் கோவத்துக்கு பேர் போனவன். எனக்கு மரியாதை கிடைக்கலன்னா நான் ரொம்ப கடுப்பாயிடுவேன். ஆனா ஹாசினி விஷயத்துல நான் நேர்மாறா நடந்துகிட்டு இருந்தேன். அவர் திமிரு புடிச்சவள்னோ, தலைக்கனம் புடிச்சவள்னோ எனக்கு தோணல. அவ ஏதோ ஒரு பிரஷர்ல இருக்குற மாதிரி எனக்கு தோணுச்சு.


அப்போ, எங்க அம்மா வந்து கேட்டாங்க,

"உன் திங்ஸை எல்லாம் பேக் பண்ணிட்டியா?"

நான் இல்லைன்னு தலையசைச்சேன்.

"முதல்ல அதை போய் செய். இல்லன்னா இவங்களையெல்லாம் கூட்டிகிட்டு போய் அங்க உக்காந்து பேசிக்கிட்டே செய்."

"வாங்க நம்ம அவனுக்கு ஹெல்ப் பண்ணலாம்"னு அகிலா சொன்னா

"இதுல வொரி பண்ணிக்க எதுவும் இல்ல. நான் இங்கிருந்து எல்லாத்தையும் அள்ளிக்கிட்டு போக போறதில்ல. பாதி திங்க்சை தான் எடுத்துக்க போறேன். நான் என்ன நாட்டை விட்டா போறேன்? இங்க இருந்து ஒரு மணி நேரம் தானே? ஏதாவது தேவைப்பட்டா இங்க வந்து எடுத்துக்கிறேன்..." நான் சிம்பிளா சொன்னேன்.

"பாருங்க, இவன் எவ்வளவு சிம்பிளா எண்டு கார்டு போட்டுட்டான். நீங்க தேவையில்லாம வொரி பண்ணிக்கிறீங்க பெரியம்மான்னு சீலன் சொன்னான்

"வாங்க என் ரூமுக்கு போகலாம்னு, என் ரூமுக்கு திங்க்ஸை பேக் பண்ண போனேன்.

என் கசின்ஸும் என் கூட வந்தாங்க. பாதி திங்ஸை அங்கேயே விட்டுட்டு மிச்சத்தை மட்டும் பேக் பண்ணிக்கிட்டேன்.

அன்னைக்கு சாயங்காலம், பேலஸ்க்கு திரும்பி போக ரெடியானா நந்தினி. பெரிய மெல்லோ டிராமாவுக்கு பிறகு, அவளுக்கு எல்லாரும் பிரியாவிடை கொடுத்தாங்க. எங்க அப்பா தான் அவளை கூட்டிகிட்டு போனாரு.

ஹாசினி எப்ப வேணா திரும்பி வரலாம்னு நான் நெனச்சேன். நான் நினைச்ச மாதிரியே, எங்க அப்பாவோட அவ திரும்பி வந்தா. நந்தினியை அங்க விட்டுட்டு, அவர் ஹாசினியை கூட்டிகிட்டு வந்தார். அவ புது பட்டுப்புடவை கட்டி இருந்தா. அத சாதாரணமா பட்டுப் புடவைன்னு சொல்லிட முடியாது. தங்க ஜரிகையால ஆன புடவையை, அவ சிங்கிள் பிளீட் வச்சி கட்டி இருந்தா. அதோட முந்தானையில, நானும் ஹாசினியும் இருக்கிற போட்டோவை, ரொம்ப அழகாவும் கிராண்டாவும் நெய்ந்திருந்ததை பார்த்து நான் அசந்து போயிட்டேன். அவளோட முந்தானையை கைல பிடிச்சு பார்த்த அகிலா,

"வாவ் கௌதம்... வாழ்க்கையிலேயே முதல் தடவை நீ அழகா தெரியுறேன்னு என்னை கிண்டல் பண்ணா.

"பிரின்சஸ் கூட இருக்கிறவங்க யாரா இருந்தாலும் அழகா தான் இருப்பாங்கன்னு மாலன் சொன்னான்.

"ஏன்? கௌதம் எப்பவுமே ஹாண்ட்சம் தான்னு என் அத்தை சொன்னாங்க.


என் முகத்துல தெரிஞ்ச சலிப்பை ஹாசினி கவனிச்சா.

"கௌதம், ரெடியாகு, நீ மினி பேலஸ்க்கு போகணும்னு அப்பா சொன்னாரு.சரின்னு சொல்லிட்டு நான் என் ரூமுக்கு போனேன். என் மனசுல ஏதோ ஒரு பாரத்தை உணர்ந்ததால என் கட்டில்ல உக்காந்தேன். இது தான் நான் வளர்ந்த இடம்... என் ரூம், என்னோட எமோஷன்ஸ் எல்லாத்தையும் பார்த்திருக்கு. என் சந்தோஷம், துக்கம், செண்டிமெண்ட், எல்லாம்... அங்க நான் அழுதுருக்கேன், வாய் விட்டு சத்தமா சிரிச்சிருக்கேன். என் சிஸ்டர்ஸ் கூட சண்டை போட்டுருக்கேன், என் கசின்ஸ் கூட கலாட்டா பண்ணி இருக்கேன்.


அப்போ...

"இங்கிருந்து வர உங்களுக்கு கஷ்டமா இருந்தா, நீங்க வரவேண்டிய அவசியம் இல்லைன்னு அங்க வந்த ஹாசினி சொன்னா.

அவ சொன்னதுக்கு என்ன அர்த்தம்? நான் அவ கூட மினி பேலசுக்கு வர்றதை அவ விரும்பலையா? போகாம இருந்தா அதுக்கு நான் என்ன காரணம் சொல்ல முடியும்? அவ தான் அவங்க அப்பா அம்மாவுக்கு என்ன காரணம் சொல்லுவா?


"இதுவும் நீ என்கிட்ட இருந்து எதிர்பார்க்கிற ஒரு வித ஹெல்ப்பா?" நான் நார்மலா இருக்கிற மாதிரி காட்டிக்கிட்டு கேட்டேன்."நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ண ட்ரை பண்றேன்னு அவ தயக்கம் இல்லாம சொன்னா


"உண்மையிலேயே எனக்கு ஹெல்ப் பண்றதுல உனக்கு விருப்பம் இருந்தா, அதை நான் கேட்கும் போது செய்ன்னு சொல்லிட்டு என்னோட சூட்கேசை எடுத்துக்கிட்டு நான் வெளியில நடந்தேன்.


ஹாசினியோட என் வீட்டை விட்டு கிளம்ப நான் தயாரானேன்... ஹாசினிக்காக... அவ மகாராணி மாதிரி இருக்கணும் அப்படிங்குறதுக்காக. இதுல என்ன ஒரு சோகம்னா, நான் ராஜா இல்ல.


நாங்க மினி பேலஸ்க்கு போனோம். எங்க குடும்பத்துல இருந்த ஒவ்வொருத்தரும் எங்களோட வந்தாங்க. அந்த புது இடத்துல எங்களை செட்டில் பண்ண நினைச்சாங்க. அந்த இடம் எங்க இருக்குன்னு எனக்கு தெரியாது. ஆனா எங்க அப்பாவுக்கு தெரியும். அதனால நான் அவரோட காரை ஃபாலோ பண்ணேன். அவரோட கார் ஒரு விசாலமான கேம்பஸ்குள்ள நுழைஞ்சிது. அதுல இருந்த பில்டிங்கை பார்க்கும் போது, அது 'மினி' மாதிரி தெரியல 'மேக்ஸி' மாதிரி இருந்தது. அதுக்கு ஏன் மினி பேலஸ்னு பேர் வாச்சாங்கன்னு எனக்கு தெரியல. என் மனசுல இருந்த ஒரே கேள்வி, ரெண்டே ரெண்டு பேருக்கு இவ்வளவு பெரிய அரண்மனை தேவையா?பேலஸ்ல இருந்தவங்க போட்டு இருந்த அதே யூனிஃபார்மை போட்டுக்கிட்டு, எங்களை வரவேற்க இரண்டு பக்கமும் நிறைய பேர் நின்னுகிட்டு இருந்தாங்க. எனக்கு ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்குள்ள நுழையுற மாதிரி இருந்து. சிவப்பு கம்பள வரவேற்புன்னா என்னன்னு நான் அப்ப தான் தெரிஞ்சுகிட்டேன். அந்த சிவப்பு கம்பளம் ஆரம்பிச்ச இடத்தில நின்னு, ஹாசினி எனக்காக வெயிட் பண்ணா. நான் போய் அவ பக்கத்துல நின்ன உடனே, அவ கையை என் கையோட கோர்த்துக்கிட்டு நடந்தா. தட்டு நிறைய பூக்களோடு நின்னுகிட்டு இருந்த வேலைக்காரங்க, அதை எங்க மேல தூவ ஆரம்பிச்சாங்க. என் இடத்துல என்னை தவிர வேற யார் இருந்திருந்தாலும், அந்த நேரத்துல தாறுமாறா சந்தோஷப்பட்டு இருப்பாங்க. ஆனா இதெல்லாம் அவசியமில்லாததுன்னு நான் நினைச்சதால, அது எனக்கு சங்கடத்தை தான் கொடுத்துச்சு. இந்த பணத்தை எல்லாம் வேற எதுக்காவது யூஸ்ஃபுல்லா செலவு பண்ணி இருக்கலாம்ல?


சில சர்வன்ட்ஸ் என்னோட பேக்கை எல்லாம் எடுத்துக்கிட்டு முதல் மாடியில் இருந்த பெரிய ரூமுக்கு போனாங்க. அது தான் எங்க ரூம்ன்னு நான் கெஸ் பண்ணினேன். ஹாசினியோட திங்ஸ் எல்லாம் ஏற்கனவே அங்க வந்து சேர்ந்திருக்கும். ஏன்னா, எங்க வீட்டுக்கு வரும் போது, ஒருசின்ன சூட்கேஸை தவிர வேற எதையுமே அவ எடுத்துக்கிட்டு வரல.


என் ஃபேமிலில இருந்தவங்க அந்த அரண்மனைய பிரம்மிப்போட பார்த்துகிட்டு இருந்தாங்க. அவங்க அதை சுத்தி பார்க்க தொடங்கினாங்க. என் அப்பாவோட பார்வை என் மேல இருந்ததை நான் உணர்ந்தேன். அவர் ஏன் என்ன அவ்வளவு டீப்பா பார்க்குறார்னு எனக்கு தெரியல. அவர் என்கிட்ட இருந்து ஏதாவது ரியாக்ஷனை எதிர்பார்த்தாரா? ஆனா டிஃபரண்டா ரியாக்ஷன் கொடுக்கிற மாதிரி அங்க எதுவும் இல்லையே!என் அம்மாவும் அப்பாவும் மாடிக்கு போனாங்க... எங்க ரூமுக்கு. எங்க அப்பா எனக்கு கால் பண்ணப்போ எனக்கு குழப்பமா இருந்தது. நான் அந்த காலை அட்டென்ட் பண்ணேன்.


"கௌத்தம், மாடிக்கு வான்னு சொல்லிட்ட காலை கட் பண்ணிட்டாரு.நாலு தாவல்ல படிக்கட்டுல ஏறி, என் அப்பா அம்மா போன அதே ரூமுக்குள்ள நானும் போனேன்.


"என்ன டாட்?"

"இனிமே இது தான் உன் வீடு. உன்னோட லைஃப் ஸ்டைல் இப்படி தான் இருக்கும். எந்த கம்ப்ளைன்ட்டும் இல்லாமல் சந்தோஷமா இருன்னு சொன்னார் எங்க அப்பா

நான் அமைதியா இருந்தேன்

"அதிர்ஷ்டசாலிங்களுக்கு மட்டும்தான் இந்த மாதிரி ஒரு ராஜ வாழ்க்கை கிடைக்கும்.

நான் அவருக்கு பதில் சொல்ல நெனச்சப்போ, எங்கம்மா கெஞ்சலா என்னை பார்த்து தலையசைச்சாங்க. எனக்கு எரிச்சலா இருந்தது. அப்போ தான் ஒரு விஷயம் என்னை ஈர்த்தது. அந்த ரூமோட ரெண்டு பக்கமும் இன்னும் ரெண்டு ரூம் இருந்தது. நான் குழப்பத்தோட பார்த்தேன் ஒருவேளை ஸ்டோர் ரூமா இருக்குமோ? என் மனசுல ஓடினதை எங்க அப்பா புரிஞ்சுகிட்டாரு.

"ஆக்சுவலா, அது உனக்கும் ஹாசினிக்கும் பர்சனல் ரூம்ஸ்.

"பர்சனல் ரூம்ஸா?" நான் புருவத்தை நெறிச்சேன்

"ஆமாம். அவளுக்கு பிரைவசி தேவை அதனால..."

என்னடா இது...! புருஷன் பொண்டாட்டிக்கு நடுவுல பிரைவசியா?

"நீங்க ரெண்டு பேரும் இந்த மெயின் ரூம்ல தான் இருப்பீங்க. அவளுக்கு தேவைப்படும் போது மட்டும் அந்த ரூமுக்கு போவா. நீயும் உன்னோட பர்சனல் வேலையை செய்ய உன் ரூமுக்கு போகலாம்."

"எனக்கு பர்சனல் வேலை எதுவும் இல்லைன்னு எங்க அப்பாவை முறைச்சு பார்த்துக்கிட்டு சொன்னேன்.

"ராயல் லைஃப்னா இப்படித்தான் இருக்கும்."

"ராயல் லைஃப்...ன்னு நான் எரிச்சலோடு சொன்னேன்.

இந்த பொண்ணு ஏற்கனவே எனக்கு ஒரு புதிரா இருந்தா. அவ தனி ரூம்ல நேரத்தை செலவு பண்ணா, இதை எப்படி ஒரு குடும்பம்னு சொல்ல முடியும்? நந்தினியும் சூர்யா கிட்ட இருந்து இப்படி பிரிஞ்சு தான் இருப்பாளா? என்ன கொடுமை இது!

என் அப்பா அம்மா அங்க இருந்து வெளியே போனாங்க.எங்க ரூம்ல இருந்து நான் வெளிய வந்தப்போ. ஹாசினி மித்ரா, நேத்ரா கூட பேசிக்கிட்டு இருந்ததை பார்த்தேன். முதல் மாடியில் இருந்து அவங்க பேசுறdh என்னால கேட்க முடிஞ்சிது.

"டாலின்னு யாரையோ கூப்பிட்டா ஹாசினி

40 வயசு இருக்கிற ஒரு லேடி அவ கிட்ட வந்தாங்க

"ரெண்டு பிளாக் கரண்ட் ஐஸ்கிரீம் கொண்டுவான்னு ஆர்டர் பண்ணா ஹாசினி.

"எஸ் மேடம்னு சொல்லிட்டு கிச்சனுக்கு போய் ரெண்டு கப் ஐஸ்கிரீம் எடுத்துக்கிட்டு வந்தாங்க டாலி.

மித்ராவும் நேத்ராவும் ஐஸ்கிரீம் கிடச்சதுல ரொம்ப சந்தோஷமா இருந்தாங்க. ஆனா எனக்கு எதுவுமே சரியா படல. என் பொண்டாட்டி கூட இருக்க முடியாததால இல்ல. ஏதோ சரி இல்லன்னு தோணுச்சு. சதித்திட்ட மாதிரி தெரிஞ்சது. எனக்கு தெரிஞ்ச வரைக்கும், எந்த அப்பா அம்மாவும் தங்களோட பிள்ளைங்களை பிரிச்சு வைக்கணும்னு நினைக்க மாட்டாங்க. சேதுபதி குடும்பம் இதை எப்படி ஏத்துக்கிடாங்கன்னு எனக்கு புரியல.

ஏற்கனவே என் பொண்டாட்டிய புரிஞ்சுக்கிறது எனக்கு பெரும் பாடா இருந்தது. இதையெல்லாம் நான் எப்படி சமாளிக்க போறேன்னு எனக்கே புரியல. என் பர்சனல் ரூமை பாக்க உள்ள போனேன். கதவை பூட்டாம சும்மா மூடினேன். அங்க ஒரு கிங் சைஸ் பெட், ஒரு அட்டகாசமான சோபா செட், இன்னும் சில டெக்கரேஷன் பொருள் எல்லாம் இருந்தது. நிச்சயமா அதெல்லாம் ரொம்ப காஸ்ட்லியானது தான். சோபாவில் உட்கார்ந்து கண்ணை மூடினேன்.

அப்போ மித்ராவும் நேத்ராவும் கலகலன்னு சிரிக்கிற சத்தம் எனக்கு கேட்டது. அவங்க எங்க ரூம்ல இருக்காங்கன்னு எனக்கு புரிஞ்சிது. நான் வெளியே போகல. ஹாசினியும் அவங்க கூட இருப்பானு எனக்கு தெரிஞ்சதால, எனக்கு போக விருப்பம் இல்ல. நான் வெளிய போனா, இந்த தனி ரூமை பத்தி அவகிட்ட நிச்சயம் கேட்பேன். அது எங்களுக்குள்ள ஒரு வாக்குவாதத்தை ஏற்படுத்தும். அது குழந்தைகளுக்கு முன்னாடி நடக்கிறதை நான் விரும்பல. அவங்க ரூமை விட்டு போற வரைக்கும் காத்திருக்க முடிவு பண்ணினேன். ஹாசினி மறுபடியும் அதே ஆளை கூப்பிடுறது என் காதுல விழுந்தது.

"டாலி..."

நான் ஒரு காலடி சத்தத்தை கேட்டேன்

"என்ன இது?" ன்னு கேட்டா ஹாசினி

"இது உங்க பிரைவசிக்காக யுவர் ஹைனஸ்ன்னு டாலி சொன்னது எனக்கு ஆச்சரியமா இருந்தது.

அப்படின்னா, இந்த தனி ரூமை பத்தி ஹாசினிக்கும் தெரியாது. அது அவங்க குடும்ப வழக்கம் இல்ல. அப்படின்னா எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி? நான் லேசா கதவைத் திறந்து அவளை பார்த்தேன்."பேபி, நான் இப்ப வந்துடறேன். நீங்க கொஞ்சம் கீழ போய் வெயிட் பண்றீங்களா?" ன்னு அவ என் அக்கா பசங்ககிட்ட கேட்டா.அவங்க சரின்னு சொல்லிட்டு ஓடி போனாங்க. தன் கையை கட்டிக்கிட்டு டாலியை முறைச்சு பார்த்தா ஹாசினி.

"பிரைவசினா என்னன்னு கொஞ்சம் எக்ஸ்பிளைன் பண்ண முடியுமான்னு கேட்டா ஹாசினி

டாலி அமைதியா இருந்தாங்க.

ஃபோனை எடுத்த ஹாசினி யாருக்கோ ஃபோன் பண்ணிட்டு, டாலியை பார்த்து,

"கதவை சாத்திட்டு வெளியில போன்னு சொன்னா.

அவ சொன்னதை டாலி செஞ்சாங்க.

ஃபோனை காதுல வச்ச ஹாசினி,

"என் ஹஸ்பண்ட் கிட்ட இருந்து எனக்கு பிரைவசி தேவைப்படும்னு எது உன்னை நினைக்க வச்சது?" ன்னு கேட்டா.

அந்த பக்கம் பேசுறது யாருன்னு எனக்கு தெரியல.

"ஆனா, நீ உன் புருஷனை விட்டு விலகி இருந்ததை நான் பார்த்ததில்லையே..."

"..."

.

"ஆரம்பத்துல எனக்கு விருப்பம் இல்லாம தான் இருந்தது. ஆனா இப்போ எனக்கு இந்த கல்யாணம் பிடிச்சிருக்கு.""........"


"நான் ஏன் அத பத்தி உன்கிட்ட சொல்லணும்?"

"......".

"அப்படியா? என்னை விட என் புருஷனை பத்தி உனக்கு தான் அதிகமா தெரிஞ்சி இருக்கு போலருக்கு..."


அந்தப் பக்கம் பேசினதை கேட்டு ஹாசினி கிண்டலா சிரிச்சா.

"நீ ஒன்னு புரிஞ்சுக்கோ, நீ என்னை எத்தனை முறை நெருப்புல தள்ளினாலும் உன்னால என்னை எரிக்க முடியாது. நான் என் சாம்பல்ல இருந்து ஃபீனிக்ஸ் மாதிரி எழுந்து வருவேன்." அப்படின்னு சொல்லிட்டு ஆத்திரமா அந்த காலை கட் பண்ணா ஹாசினி.

தொடரும்...

Bạn đang đọc truyện trên: Truyen3h.Co